Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தேமுதிகவினரால் என் குடும்பத்துக்கே ஆபத்து! - டிஜிபியிடம் வடிவேலு மனு
வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரசாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக இருந்து வந்தனர்.
இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக மிரட்டல் இருந்து வருகிறது. எனது சொத்துகள் தே.மு.தி.க.வினரால் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றன.
எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,தே.மு.தி.க.வினரே முழு காரணமாக இருப்பார்கள். ஜனநாயக நெறிமுறைப்படி பிரசாரம் செய்த எனக்கு தே.மு.தி.கவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தே.மு.தி.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.