புது ஒளிப்பதிவாளர் வந்தாச்சு... தொடருமா 'கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்'?
வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தின் புதிய ஒளிப்பதிவாளராக ராம்நாத் ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் காரணங்களால் இரண்டு ஆண்டுகள் நடிக்காமலிருந்த காமெடிப் புயல் வடிவேலு, இப்போது கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என மகா நீளமான தலைப்பைச் சூட்டியுள்ளனர்.
இந்தப் படம் முதல் ஷெட்யூல் தொடங்கும்போதே வடிவேலுவுக்கும் படத்தின் இயக்குநர் யுவராஜுக்கும் மோதல் என செய்திகள் வெளியாகின. மேலும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கும் இயக்குநர் யுவராஜுக்கும் ஒத்துவரவில்லையாம்.

இதனால் வடிவேலு, மீண்டும் மதுரைக்குப் போய் தங்கிவிட்டார். படப்பிடிப்பும் நின்றுபோனது.
இந்த நிலையில் படத்திலிருந்து ஆர்தர் வில்சனை தயாரிப்பாளர் நீக்கியுள்ளார். அவருக்குப் பதில் ராம்நாத் ஷெட்டியை நியமித்துள்ளார். யுவராஜூம் வடிவேலுவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால், கஜபுஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











