Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கார்த்தி படத்தில் நடிக்கிறார் வடிவேலு.. ஸ்ருதியைக் காதலிப்பது போல காட்சிகள்!
சென்னை: தெனாலிராமனுக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்கக் கதை கேட்டு வரும் வடிவேலு, கார்த்தியின் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
இந்தப் படத்தில் அவர் ஸ்ருதி ஹாஸனை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் நடிக்கிறாராம்.
தெனாலிராமன் படம் பெரிதாகப் போகாவிட்டாலும், வடிவேலுவின் கவுரவத்தைக் குறைக்காத படமாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு, இரு புதிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் வடிவேலு. அதே நேரம் புதிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்கவும் சம்மதித்துள்ளார்.
ரௌத்ரம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் படம் முழுக்க வரும் நகைச்சுவை வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். வடிவேலுவும் கதையைக் கேட்ட பிறகு நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
இந்தப் படத்தில் நாயகி ஸ்ருதி ஹாஸனை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் வடிவேலு நடிக்கப் போகிறாராம்.
வடிவேலு இதே போல ஏற்கெனவே போக்கிரி படத்தில் நடித்தது நினைவிருக்கலாம். அதில் அஸினைக் காதலிப்பது போல நடித்திருப்பார். போதாக்குறைக்கு சூர்யா - அஸின் நடித்த கஜினி படத்தின் புகழ்பெற்ற சுட்டும் விழிச் சுடரே பாடலைப் பாடி ஆடுவது போல காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்திலும் அப்படி காட்சிகள் வைத்தால், ஏழாம் அறிவு பட டூயட்டைப் பயன்படுத்துவார்களோ?