வடிவேலு படத்துக்கு தீர்ந்தது சிக்கல்... தெலுங்கு அமைப்புகளுடன் சுமூக உடன்பாடு.. சிக்கலின்றி ரிலீஸ்!

By Shankar

சென்னை: நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்துக்கு எதிராகக் கிளம்பிய தெலுங்கு அமைப்புகள், அவருடன் சுமூகப் போய்விட்டன.

இதனால் திட்டமிட்டபடி நாளை மறுதினம் திரைக்கு வருகிறது தெனாலிராமன்.

இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இந்தபடத்தை தெலுங்கு அமைப்பினருக்கு திரையிட்டுக்காட்ட மாட்டேன் என்று பிடிவாதம் காட்டியதால், தெலுங்கு அமைப்பினரும் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். ஆனால் படம் சுமூகமாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வடிவேலுவின் மென்மையான அணுகுமுறையால் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Vadivelu settles issues with Telugu outfit

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி வந்தார்கள். நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தார்கள். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

அப்படியும் சமாதானம் ஆகாத அமைப்பினர், படத்தை எங்களூக்கு திரையிட்டுக் காட்டாமல் ரிலீஸ் செய்தால், போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். வடிவேலுவுக்கு எதிராக போராட்டம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமான், பாரதிராஜா உள்பட பலர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சமரசம் ஆவதே நல்லது என்று முடி வெடுத்த வடிவேலு, சென்னை ரெசிடென்சி ஓட்டலில் இன்று தெலுங்கு அமைப்பினர்களை சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி தெனாலிராமன் எந்தவித சிக்கலும் இல்லாமல் திரைக்கு வருகிறது.

சமரசப் பேச்சு முடிந்த பிறகு வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் இந்தப்படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தபடி படத்தில் அத்தனை விசயங்களும் .

படத்தில் ராஜா கேரக்டரை உயர்வாகத்தான் காட்டியிருக்கிறோம். ஆனால், தெலுங்கு அமைப்பினர் தவறாக காட்டியிருக்கிறோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் படத்தை பற்றி தெளிவாக விளக்கினேன். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு சந்தேகம் இருப்பதால் படத்தை திரையிட்டுக்காட்ட சம்மதித்துள்ளேன்.

'யாராவது எதையாவது கொளுத்தி போட்டுடுவாங்க. அதையெல்லாம் கண்டுக்கிடாதீங்க. நாம எல்லாரும் இந்த மண்ணுல தாயா புள்ளயா, அண்ணன், தம்பியா வாழணும்னு அவுங்க கிட்ட கேட்டுக்கிட்டேன். சந்தோஷமா போயிருக்காங்க," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X