Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வடிவேலு புகார் எதிரொலி – சிங்கமுத்து உள்ளிட்ட 10 பேர் மீது புது வழக்கு
வடிவேலு, சிங்கமுத்து இடையே ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுதொடர்பாக இரு தரப்பும் போலீஸில் புகார் செய்துள்ளன. வழக்குகளும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இந்த இரு தரப்புக்கும் இடையே புதிதாக ஒரு மோதல் வெடித்துள்ளது.
நடிகர் வடிவேலுவின் அலுவலகம் சாலிகிராமம், வேதவள்ளி தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எதிரே கண்ணன் என்பவரின் வீடு உள்ளது. இவர் ஒரு தயாரிப்பாளர். இவரது படத்தில் சிங்கமுத்து நடிப்பதாக தெரிகிறது.
கண்ணன் வீட்டில் நடந்த பிறந்த நாள் விழாவுக்கு வந்தபோது சிங்கமுத்துவுக்கு பட்டாசுகள் வெடித்து தடபுடலாக வரவேற்பு அளித்துள்ளனர். இதையடுத்து வடிவேலு தரப்பில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் தரப்பட்டது. அதன் பேரில் வடிவேலு அலுவலகத்தற்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வடிவேலுவின் ஆதரவாளர்கள் தனது வீட்டுக்கு வந்து மாமனாரைத் தாக்கியதாக கண்ணன் போலீஸில் திடீரென புகார் கொடுத்தார். பதிலுக்கு வடிவேல் தரப்பில் சிங்கமுத்து உள்ளிட்டோர் வழக்கை வாபஸ் பெறக் கோரி மிரட்டுவதாக வடிவேலு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வடிவேலு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து, கண்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.