twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் வடிவேலு மகன் திருமணம்... திரையுலகினருக்கு அழைப்பில்லை!

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களுள் ஒருவரான வடிவேலுவின் மகன் சுப்பிரமணி - புவனேஸ்வரிக்கு இன்று சென்னையில் திருமணம் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானவர்களை வடிவேலு அழைக்கவில்லை.

    வடிவேலு தன் மகளுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடத்தி வைத்தார். இந்தத் திருமணம் மதுரையில் நடந்தது. தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலரை மட்டுமே அவர் திருமணத்துக்கு அழைத்தார்.

    Vadivelu son marriage - No invitation to film celebrities

    அடுத்து தன் மகன் சுப்பிரமணி திருமணத்தை இன்று சென்னையில் நடத்தினார். மணப்பெண் புவனேஸ்வரி வடிவேலுவின் மனைவி ஊரான திருபுவனத்தைச் சேர்ந்தவர்.

    இந்தத் திருமணத்துக்கு திரையுலகைச் சேர்ந்த யாரையுமே அழைக்கவில்லையாம் வடிவேலு. அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு தரவில்லை.

    சென்னை ராஜா முத்தையா மண்டபத்தில் நடந்த இந்த திருமணத்துக்கு தனது நெருங்கிய உறவிணர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார் வடிவேலு.

    English summary
    Vadivelu's son Subramani - Bhuvaneswari marriage was held at Chennai today without any Cinema VIPs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X