Don't Miss!
- News நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா? கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. இன்று ஐகோர்ட் விசாரணை
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்?
சென்னை: நடிகர் வடிவேலு மதுரையிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: படவாய்ப்புகள் இல்லாததால் மதுரையிலேயே தங்கி விட்டாராம் நடிகர் வடிவேலு.
இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருப்பது வடிவேலுவின் புகைப்படங்கள் மற்றும் டயலாக்குகள்தான். அந்தளவிற்கு அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமைகளில் அவரும் ஒருவர். ஒரு காலத்தில் இரவு பகல் பாராமல் அவர் நடிக்கும் அளவிற்கு பட வாய்ப்புகள் இருந்தது.
இதனால் காமெடி நடிகராக இருந்தவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அப்படங்களும் அவருக்கு வெற்றியையே தந்தது.
ஆனால், அதே நிலைமை நீடிக்கவில்லை. அரசியல் காரணம், புதிய காமெடி நடிகர்களின் வருகை உள்ளிட்ட இன்னும் சில காரணங்களால் அவருக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படமும் பாதியிலேயே நின்றது. அந்தப் பஞ்சாயத்தும் முடிந்தபாடில்லை.
இதனால் சென்னையில் தங்கி இருப்பதை தவிர்த்து, தன் சொந்த ஊரான மதுரைக்கே வடிவேலு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவைப்படும் போது மட்டும் இனி சென்னைக்கு வந்து போக அவர் முடிவு செய்துள்ளாராம்.
The Kollywood sources says that actor Vadivelu is staying longtime in Madurai itself.