Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இடியாப்ப சிக்கலில் வடிவேலு: ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்கும் ஷங்கர்
Recommended Video
சென்னை: ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கொடுக்குமாறு வடிவேலுவிடம் 24ம் புலிகேசி படக்குழு கேட்டுள்ளது.
23ம் புலிகேசி படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை 24ம் புலிகேசி என்ற பெயரில் எடுக்க திட்டமிட்டனர். சிம்புதேவன் இயக்க இயக்குனர் ஷங்கர் தயாரித்தார்.
முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு ஹீரோவாக நடிக்கத் துவங்கினார்.
வடிவேலு
ரூ. 6 கோடி செலவில் செட் போட்டு படப்பிடிப்பு நடந்தது. 10 நாட்கள் நடித்த பிறகு வடிவேலுவுக்கும், சிம்புத்தேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வடிவேலு படத்தில் இருந்து விலகினார்.
விளக்கம்
வடிவேலு படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து படக்குழு அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது. இது குறித்து வடிவேலுவிடம் விளக்கம் கேட்க அவரோ, தான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும், படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதாகவும், அதனால் படத்தில் நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
முடக்கம்
24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முடங்கிப் போயுள்ளது. இதற்கிடையே செட்டையும் பிரித்துவிட்டார்கள். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் பேசியும் வடிவேலு அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
நஷ்டஈடு
24ம் புலிகேசி படத்தை கைவிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். இந்நிலையில் வடிவேலுவிடம் இருந்து ரூ. 9 கோடி நஷ்டஈடு வாங்கித் தருமாறு படக்குழு தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது.