Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாரதிராஜா படத்துக்கு பாட்டெழுதும் போது கண்ணீர் சிந்தினேன்.. வைரமுத்து உருக்கமான ட்விட்டர் பதிவு!
சென்னை: நாட்படு தேறல் இரண்டாம் பருவத்தின் ஆறாம் பாடல் வெளியீட்டு பணிகள் ஒருபக்கம், இன்னொருபுறம் பாராதிராஜா நடித்து வரும் புதிய படத்துக்கு பாட்டு எழுதும் பணி என பரபரப்பாக வேலை பார்த்து வருகிறார் வைரமுத்து.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்படு தேறலின் புதிய பாடல்களை வெளியிட்டு வருகிறார் வைரமுத்து.
இந்த வாரம் 'ஒரு ஜப்பானிய மீனைப்போல்' எனும் வித்தியாச வரிகளுடன் இளமை துள்ளும் காதல் பாடலை உருவாக்கி உள்ளார் வைரமுத்து.
வரும் ஞாயிற்றுக்கிழமை இசையரவி தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கும், கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கும் அந்த பாடல் ஒளிபரப்பாகவுள்ளது.
மே 22 ஞாயிறு
— வைரமுத்து (@Vairamuthu) May 20, 2022
நாட்படு தேறல் - 2
ஆறாம் பாடல்
‘ஒரு ஜப்பானிய மீனைப்போல்’
இசை யருவி - 1.30
கலைஞர் டிவி - 5.30
இதோ
முன்னோட்டம்...
---#naatpadu_theral_season2@kalaignartv_off | #isaiaruvi |@Benny_Dayal | @jerard_felix @Radhika_master pic.twitter.com/T4xgYionkz
அந்த ட்விட்டர் பதிவை தொடர்ந்து இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா நடித்து வரும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்கிற படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையில் பாடல் எழுதி வருகிறார் வைரமுத்து அது தொடர்பான அறிவிப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
"பாரதிராஜா நடிக்க
தங்கர்பச்சான் இயக்க
ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம்
'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'
பாட்டெழுதும்போதே
சொல்லோடு கசிந்தது கண்ணீர்
விழுமியங்கள்
மாறிப்போன சமூகத்திற்கு
என்னோடு அழுவதற்குக்
கண்ணீர் இருக்குமா?
இல்லை...
கண்களாவது இருக்குமா?
பார்ப்போம்."
என அது தொடர்பான அறிவிப்பை கவிதை வடிவிலே சொல்லி உள்ள வைரமுத்து, அந்த வரிகளை எழுதும் போது தனது கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.