Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேஸி மோகன் பற்றி வைரமுத்து
சென்னை: ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது என்று கிரேஸி மோகன் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், கதை-வசனகர்த்தாவும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகனுக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு உயிர் இழந்தார். கிரேஸி மோகனின் கடைசி நிமிடங்களின்போது அவருடன் உலக நாயகன் கமல் ஹாஸன் இருந்துள்ளார். மோகனின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்ததாக கமல் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
20 நாளுக்கு முன்பு கிரேஸி அங்கிளை பார்த்தேனே, நல்லா இருந்தாரே: ஆர்த்தி
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து கிரேஸி மோகன் பற்றி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது.
— வைரமுத்து (@vairamuthu) June 10, 2019
ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது.
அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும்.
கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது.
ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது.
அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கிரேஸி மோகனை அண்மையில் சந்தித்து பேசியவர்கள் அனைவரும் சொல்வது, நான் பார்த்தபோது நல்லா தானே இருந்தார், இப்படி திடீர்னு போவார்னு எதிர்பார்க்கவில்லையே என்பது தான். நல்ல ஆரோக்கியமாக இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்காதது நடப்பது தானே வாழ்க்கை என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.