Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இணைத்த உன்னத மனிதர் பஞ்சு அருணாச்சலம் என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் உடல் நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தி.நகரில் உள்ள வீட்டில் மறைந்தார்.
அவருக்கு வயது 75. அமெரிக்காவிலிருந்து அவரது மூத்த மகன் மற்றும் இளைய மகள் வர வேண்டியிருந்ததால் பஞ்சு அருணாசலத்தின் உடல் மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் திரையுலகில் பாடலாசிரியரகவும், கதாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பன்முகத் திறன் கொண்ட ஜாம்பவானாக திகழந்தவர்.
இன்று காலை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறுதி மரியாதை செலுத்த வந்த கவிஞர் வைரமுத்து, 'கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருபெரும் நடிகர்களை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம் அய்யா. அவரது இழப்பு திரையுலகத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் சுப்புவிற்கு ஆறுதல் கூறினார்.