Don't Miss!
- News நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா? கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. இன்று ஐகோர்ட் விசாரணை
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இணைத்த உன்னத மனிதர் பஞ்சு அருணாச்சலம் என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் உடல் நலக் குறைவால் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி தி.நகரில் உள்ள வீட்டில் மறைந்தார்.
அவருக்கு வயது 75. அமெரிக்காவிலிருந்து அவரது மூத்த மகன் மற்றும் இளைய மகள் வர வேண்டியிருந்ததால் பஞ்சு அருணாசலத்தின் உடல் மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் திரையுலகில் பாடலாசிரியரகவும், கதாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பன்முகத் திறன் கொண்ட ஜாம்பவானாக திகழந்தவர்.
இன்று காலை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறுதி மரியாதை செலுத்த வந்த கவிஞர் வைரமுத்து, 'கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருபெரும் நடிகர்களை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம் அய்யா. அவரது இழப்பு திரையுலகத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மகன் சுப்புவிற்கு ஆறுதல் கூறினார்.