Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...! - வைரமுத்து
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவாஜி கணேசனின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி கணேசன் சிலையை கருணாநிதிதான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதை தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிவாஜி கணேசன் பீடத்தில் இடம்பெற்றிருந்த கருணாநிதியின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும்.
ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்? சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்தான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். கன்னியாகுமரியில் கருணாநிதி ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயன பூச்சு பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும். சிலையை சிலையாக பார்க்கவேண்டும்; அரசியலாக பார்க்கக்கூடாது.
சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை காமராஜர் சாலையில் கருணாநிதி நிறுவியபோது அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன். சிலை மறுநிலை நாட்டம் செய்யப்பட்டாலும் அந்த சிலையோடு கருணாநிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கவேண்டும்.
ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கருணாநிதியின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கருணாநிதியின் திருப்பெயரை தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெற செய்யவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாக தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.