Don't Miss!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...! - வைரமுத்து
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவாஜி கணேசனின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி கணேசன் சிலையை கருணாநிதிதான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதை தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிவாஜி கணேசன் பீடத்தில் இடம்பெற்றிருந்த கருணாநிதியின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும்.
ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்? சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்தான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். கன்னியாகுமரியில் கருணாநிதி ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயன பூச்சு பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும். சிலையை சிலையாக பார்க்கவேண்டும்; அரசியலாக பார்க்கக்கூடாது.
சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை காமராஜர் சாலையில் கருணாநிதி நிறுவியபோது அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன். சிலை மறுநிலை நாட்டம் செய்யப்பட்டாலும் அந்த சிலையோடு கருணாநிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கவேண்டும்.
ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கருணாநிதியின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கருணாநிதியின் திருப்பெயரை தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெற செய்யவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாக தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!