Don't Miss!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கன்னிப் பெண்கள் கூட்டம் .. கண்ணன் நடுவினிலே.. யாரை சொல்கிறார் கங்கை அமரன்!
சென்னை : இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் என ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகி பலரும் கங்கை அமரனின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.
தளபதி 66 ஷுட்டிங்கில் இணைந்த பிரபலம்...அப்போ படம் செமயா இருக்குமே

‘தடை உடை‘
நடிகர் பாபி சிம்ஹா தடை உடை என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசையமைக்கிறார்.

வாழ்த்துக்கள்
இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வைரமுத்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு, பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு தடை உடை என்று பெயர் வைத்தேன். படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தேன். இந்தப் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மாலை சூட்டி மகிழ்ந்தார்கள். சின்னச் சின்னக் கொண்டாட்டங்களே வாழ்க்கை என்று அதில் பதிவு செய்திருந்தார்.

கண்ணன் நடுவினிலே
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, போட்டோவை டேக் செய்த இசையமைப்பாளர் கங்கை அமரன், கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்...கண்ணன் நடுவினிலே என வைரமுத்துவை கிண்டலடிக்கும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்து இருந்தார்.

மனம் புண்படாதா?
இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் கங்கை அமரனை கண்டபடி விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் ஒரு ரசிகர், இந்த பதிவினை பார்த்தால், அய்யா கவிஞரின் மனது புண்படாதா? நீங்கள் அவரின் நல்ல நண்பர் ஆயிற்றே என்று கேட்டுள்ளார்.

நண்பர்கள்தான்
இதற்கு பதிலளிக்கும் வகையில்,கங்கை அமரன், நாங்க இப்படியெல்லாம் பேசிக்கொள்ளும் நண்பர்கள்தான் ... இப்போதும் கூட என கூறியுள்ளார். என்னத்தான் நண்பர்களாக இருந்தாலும் பொது இடத்தில் ஒருவரை இப்படி விமர்சிப்பது அநாகரிகமானது. இந்த பதிவை வைரமுத்து கூட ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று கூறிவருகின்றனர்.