Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே.. ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே.. கலங்க வைக்கும் வைரமுத்து!
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுஜித்துக்காக கலங்க வைக்கும் கவிதையை வடித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
திருச்சி அருகே அழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க நவீன எந்திரங்களின் உதவியுடன் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு நாட்களாகியும் குழந்தை மீட்கப்படாததால் ஒட்டு மொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
குழந்தையை மீட்கும் ஒவ்வொரு முயற்சியும் பின்னடைவை சந்தித்து வருகிறது. குழந்தையை இன்றுக்குள் மீட்டுவிட மாட்டார்களா என தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
மீண்டும் ஒரு மரியாதை.. சத்தமில்லாமல் ஓம் படத்தின் தலைப்பை மாற்றிய பாரதிராஜா!
|
உருக்கமான கவிதை உருக்கமான கவிதை
குழந்தை நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தை சுஜித் குறித்து கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒரு உருக்கமான கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சோளக்கொல்லையிலே
சொல்லாமப் போனவனே..
அந்த கவிதையாவது,
சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே
|
ஆழ்துளை எந்திரத்தையோ
குழந்தை சுஜித்துக்காக நேற்று முதல் தனது கவிதைகள் வாயிலாக நம்பிக்கையை ஊட்டி வருகிறார் வைரமுத்து. அந்த வகையில் காலையில் அவர் பதிவிட்ட கவிதை,
அரசு எந்திரத்தையோ
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.
|
கண்ணீரோடு கைதட்டுகிறேன்
நேற்று தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்கி குழந்தையை காப்பாற்ற தயாரான செய்தியை அறிந்த வைரமுத்து அவர்களை வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் கவிதை பதிவிட்டிருந்தார். அந்த கவிதையாவது,
குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன்.
உருக்கமான கவிதை
குழந்தை நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தை சுஜித் குறித்து கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒரு உருக்கமான கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.