Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்பாஸுக்கு பிறகு வையாபுரி கமிட் ஆன பெரிய படம்!
சென்னை : தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் எல்லோரும் தற்போது படங்கள், விளம்பரங்கள் என பிஸியாகிவிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போது தேடித்தேடி வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம். தனக்கு கிடைத்த பாப்புலாரிட்டியால் நடிகை ஓவியாவும் தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே வீட்டை விட்டுப் போகிறேன் எனக் கூறியவர் வையாபுரி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பிரச்னையின் போதும் இவர் பலமுறை இப்படிக் கூறினார். ஆனால், எவிக்ட் ஆகாமல் தொடர்ந்து பங்கேற்றார்.
கிட்டத்தட்ட 80 நாட்கள் வரை இருந்ததால், ஒருவேளை டைட்டிலை வென்றுவிடுவாரோ என அனைவரையும் நினைக்க வைத்துவிட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த இவர் தன் வாழ்க்கையில் பல விஷயங்களை தற்போது உணர்ந்து கொண்டதாகப் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவர் சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு இரண்டாம் பாகத்தில் முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று வையாபுரி கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் முன்பு ஓவியாவும் நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.