Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய படக்குழு... இது யார் செய்த குறும்பு!
நான் செய்த குறும்பு பட விழாவில் ஐந்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
Recommended Video
சென்னை: கயல் சந்திரனின் நான் செய்த குறும்பு பட விழாவில் ஐந்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
கயல் சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கும் இப்படத்தை ரைட்டர் இமேஜினேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக சினிமா தொடக்க விழா அனைத்தும், சம்பிரதாய சடங்குகளுடன் தான் நடக்கும். ஆனால் இப்படத்தின் துவக்க விழா வித்தியாசமான முறையில் நடந்தது.
வடபழனி பிரசாத் லேபில் உள்ள விநாயகர் கோயிலில் முதலில் பூஜை போடப்பட்டு, பின்னர் விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்த ஐந்து பெண்களுக்கும், மாலையிட்டு நலங்கு வைத்து, புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர்.
படக் குழுவின் சார்பில் ஐந்து பெண்களுக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. படக்குழுவினர் அனைவரும் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கியதுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களுக்கு சுகப்பிரசவம் தொடர்பான நூல்கள் வழங்கப்பட்டன.