Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சர்ச்சைக் காட்சிகள் நீக்கம்.. பிப். 15-ல் வனயுத்தம்... எதிர்ப்புக்கு தயாராகும் வீரப்பன் ஆதரவாளர்கள்!
இந்தப் படத்தில் வீரப்பனை கேவலமாக சித்தரித்திருந்தால் போராடத் தயாராகி வருகிறார்கள் வீரப்பன் ஆதரவாளர்கள்.
ந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை தமிழில் வனயுத்தம் என்ற பெயரிலும் கன்னடத்தில் அட்டகாசம் என்ற பெயரிலும் படமாகியுள்ளது. வீரப்பன் வேடத்தில் கிஷோர், போலீஸ் அதிகாரி வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளனர்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டரில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த படத்தை வெளியிட தடை கோரி முத்துலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தடை விதிக்கப்பட்டது.
இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் வழக்கை விசாரித்து முத்துலட்சுமியின் திருமண காட்சியையும் அவர் போலீசிடம் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியையும் நீக்கி விட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குநர் நீக்கிவிட்டார். கன்னட பதிப்பிலும் அக்காட்சிகள் நீக்கப்படுகின்றன. வருகிற 15-ந்தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இப் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரம் வீரப்பனை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் ஏதேனும் இருந்தால் படத்துக்கு எதிராக பெரும் போராட்டத்தில் இறங்க வீரப்பன் ஆதரவாளர்கள் தயாராகிவருகின்றனர்.
காரணம், வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கூறும் போலீஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோரிடம் படத்தின் ஸ்கிரிப்டைக் காட்டி அனுமதி பெற்றே படமெடுத்துள்ளார் இயக்குநர். எனவே நிச்சயம் வீரப்பனை இந்தப் படம் நல்லவராகக் காட்டப்போவதில்லை. ஆகவே போராட்டத்துக்குத் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளனராம்.