Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வீரப்பன் கொல்லப்பட்டது எப்படி? 'வனயுத்தத்தில்' பதில் வைத்திருக்கிறேன்! - இயக்குநர்
குப்பி படத்தின் மூலம் பரபரப்பாக அறிமுகமானவர் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். அதன் பிறகு இப்போது வனயுத்தம் என்ற பெயரில் சந்தனக் காட்டு வீரப்பனின் கதையை எடுத்துள்ளார். இதே படம் கன்னடத்தில் அட்டஹாஸா என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் வனயுத்தம் படத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்தக் காட்சிகளை நீக்க ரமேஷ் ஒப்புக் கொண்டதால், இப்போது படம் எந்த சிக்கலுமின்றி வெளியாகிறது.
இதுகுறித்து இயக்குநர் ஏஎம்ஏர் ரமேஷ் கூறுகையில், "இந்தப் படத்தில் முத்துலட்சுமி ஆட்சேபித்த காட்சிகளை நீக்கிவிட்டோம். யார் மனதையும் புண்படுத்த இந்தப் படத்தை எடுக்கவில்லை. உண்மைகளை வெளியில் சொல்லவே எடுத்தேன். இதற்காக நான் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல.. 7 ஆண்டுகள்.
இந்தப் படத்துக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவிருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை குறித்த பல விவரங்களை என்னிடம் விடுதலைப் புலிகளே கொடுத்துள்ளனர். அதனால் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வராது என நம்புகிறேன்.
இங்கே தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன்," என்றார்.