Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீரப்பன் கொல்லப்பட்டது எப்படி? 'வனயுத்தத்தில்' பதில் வைத்திருக்கிறேன்! - இயக்குநர்
குப்பி படத்தின் மூலம் பரபரப்பாக அறிமுகமானவர் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். அதன் பிறகு இப்போது வனயுத்தம் என்ற பெயரில் சந்தனக் காட்டு வீரப்பனின் கதையை எடுத்துள்ளார். இதே படம் கன்னடத்தில் அட்டஹாஸா என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் வனயுத்தம் படத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்தக் காட்சிகளை நீக்க ரமேஷ் ஒப்புக் கொண்டதால், இப்போது படம் எந்த சிக்கலுமின்றி வெளியாகிறது.
இதுகுறித்து இயக்குநர் ஏஎம்ஏர் ரமேஷ் கூறுகையில், "இந்தப் படத்தில் முத்துலட்சுமி ஆட்சேபித்த காட்சிகளை நீக்கிவிட்டோம். யார் மனதையும் புண்படுத்த இந்தப் படத்தை எடுக்கவில்லை. உண்மைகளை வெளியில் சொல்லவே எடுத்தேன். இதற்காக நான் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல.. 7 ஆண்டுகள்.
இந்தப் படத்துக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவிருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை குறித்த பல விவரங்களை என்னிடம் விடுதலைப் புலிகளே கொடுத்துள்ளனர். அதனால் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வராது என நம்புகிறேன்.
இங்கே தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன்," என்றார்.