Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா.. - 'தெய்வமகள்' சத்யா பகீர்!
Recommended Video
சென்னை : சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடிப்பதன் மூலம் பலரது குடும்பத்திற்கும் வேண்டியவராகிவிட்டார் வாணி போஜன்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் பல துறை சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். இதில் பாலியல் தொல்லைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பேசிய வாணி போஜன், தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை பற்றி வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
வாணி போஜன்
சினிமாவைப் போன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் 'தெய்வமகள்' உள்ளிட்ட பல சீரியல்களுக்கு பலர் தீவிர ரசிகர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. 'தெய்வமகள்' சீரியல் நாயகி சத்யாவுக்கு (வாணி போஜன்) என்று தனியாக ரசிகர்களும் உண்டு.
பாலியல் தொல்லை
சமீபத்தில் நிறைவுபெற்ற 'தெய்வமகள்' சீரியல் வாணி போஜனை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. சத்யா எனும் போல்டான கேரக்டரில் நடித்து பல பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த வாணி போஜன் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வெளிப்படையாக
திரையுலகிற்கு வரும் ஹீரோயின்களில் பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கின்றனர். சமீபமாக, பல நடிகைகளும் தாங்கள் துறையில் அனுபவித்த கஷ்டங்களை மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். சீரியல் நடிகை வாணி போஜன் இதுபற்றி வாய் திறந்துள்ளார்.
தோழியின் தந்தை
சத்யா 4-ம் வகுப்பு படிக்கும்போது அவரது தோழியின் வீட்டிற்கு சென்றாராம். அங்கு தோழியின் தந்தை, உன்னுடைய தோழி மேலே மாடியில் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார். சத்யாவும், அதனை நம்பி மாடிக்குப் போக, பின்னாலேயே வந்த அவர் கதவை பூட்டியுள்ளாராம்.
யாரிடமும் சொல்லவில்லை
பின்பு, அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் தனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தோழியிடமும் இதனை தெரிவிக்கவில்லையாம். ஒருவேளை அவர் தோழியிடம் சொல்லியிருந்தால், அவள் என்ன செய்திருப்பாள் என்றும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார் சத்யா.