Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கணவர் மரணம்: கவலையில் வாடும் பாடகி வாணி ஜெயராம்
சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் தனது கணவரை இழந்து வாடுகிறார்.
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி வாணி ஜெயராம். பி. சுசீலா கொடி கட்டிப் பறந்த காலத்தில் தனக்கென்று ரசிகர்களை வைத்திருந்தார் வாணி ஜெயராம்.
திரையுலகில் பிரபலமானவராக இருந்தாலும் கணவர் ஜெயராம் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார். அவர்களின் அன்பை பார்த்து வியந்தவர்கள் பலர் உண்டு. அப்படி ஒன்றி இருந்த அவர்களின் வாழ்வில் மரணம் வழியாக பிரிவு ஏற்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயராம் காலமானார். கணவர் உயிருக்கு போராடிய போது கூட அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் வாணி.
[ ஆடையை அவிழ்த்துவிட்டு ஆடச் சொன்னார்: இயக்குனர் மீது நடிகை பரபர புகார் ]
ஜெயராம் இல்லாத வாழ்க்கையை வாழ அவர் கஷ்டப்படுகிறார். அவர் இல்லாத உலகில் வாழ தெம்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அவரும், ஜெயராமும் எப்படி பாசமாக இருந்தார்கள் என்பது தெரிந்தவர்களுக்கு அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்ற முடியவில்லை.
கணவரை இழந்து வாடும் வாணிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.