பிக்பாஸ் பிரபலத்துடன் காதலில் லயிக்கும் வாணி ராணி சீரியல் நடிகை? தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: வாணி ராணி சீரியல் நடிகை நவ்யா சுவாமி பிக்பாஸ் பிரபலஙம ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு தொலைக்காட்சி நடிகரான ரவி கிருஷ்ணா, தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது ஆமே கத என்ற சீரியலில் நடித்து வருகிறர் ரவி கிருஷ்ணா. இந்த சீரியலில் வாணி ராணி சீரியலில் நடித்த நடிகை நவ்யா சுவாமி, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இருவருக்குள்ளும் நெருக்கம்
இந்த சீரியலில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி, வேற லெவலில் உள்ளது. அவர்களின் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீரியலில் இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கமும் கெமிஸ்ட்ரியும் அவர்கள் உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என்ற பேச்சை கிளப்பி விட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஐ லவ் யூ
நடன நிகழ்ச்சியில் பங்கேற்றபோதும் இருவரும் ஒருவருக்கொருவர் 'ஐ லவ் யூ' சொல்லிக் கொண்டனர். பிக் பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ரவி கிருஷ்ணா, 'வருதினி பரிணயம்', 'பவமரடல்லு' மற்றும் 'தட் இஸ் மகாலட்சுமி' போன்ற சீரியல்களில் பிரபலமானவர்.

100% லவ்
நடிகை நவ்யா சுவாமி ராதிகாவின் வாணி ராணி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். இதற்கிடையே தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகும் 100% லவ் என்ற நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

ரியல் லைஃப்பிலும்..
இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமாக உள்ளீர்கள், நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என இருவரையும் புகழ்ந்து வருகின்றனர். பலரும் இருவரும் ரியல் லைஃப்பிலும் ஒன்று சேர வேண்டும் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











