Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டிரெண்டிங்கில் வெண்ணிலா பாடல்.. ரசிகர்கள் வரவேற்பு!
சென்னை : வெள்ளை யானை படத்தில் வரும் வெண்ணிலா பாடல் தற்போது பிரபலமாகி வருகிறது.
திருடா திருடி படத்தை இயக்கியவர் தான் சுப்பிரமணியம் சிவா. இவரது படம் தான் வெள்ளை யானை இதில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு நடிக்கிறார்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசை பலரையும் தற்போது கவர்ந்து வருகிறது. ஜீவாவின் ஜிப்சி படத்திற்கு இவர் தான் இசை அமைத்தார் அதில் பாடல்கள் அனைத்தும் ஹிட். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்திற்கும் இவர் தான் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனுஷை வைத்து தனது முதல் திரைப்படமாக திருடா திருடி படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் சிவா. பின் நான்கு ஆண்டுகள் கழித்து ஜீவாவை வைத்து பொறி என்ற படத்தை இயக்கினார் சுப்பிரமணியம் சிவா.
இயக்குனர் அமீரை வைத்து இவர் எடுத்த திரைப்படம் தான் யோகி இதில் அமீரின் கதாபாத்திரத்தை பலரும் பாராட்டினர். இதன் பின் மீண்டும் சீடன் என்ற படத்தை தனுஷை வைத்து இயக்கினார் சுப்பிரமணியம் சிவா. இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.
நடிகை கங்கனாவுக்கு பத்மஶ்ரீ... மெகா கேக் வெட்டி சென்னையில் கொண்டாடிய 'தலைவி' டீம்
இயக்குனராக மட்டுமின்றி வட சென்னை மற்றும் அசுரன் படங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார் சுப்பிரமணியம் சிவா. அமலா பால் நடித்த அம்மா கணக்கு படத்தில் வசனமும் எழுதி உள்ளார்.
தற்போது இப்பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணன் இசையில் உமாதேவியின் வரிகளில் விஜய் நரைன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரின் காந்த குரலில் வெளியாகி உள்ள பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இதில் பாடலாசிரியராக இயக்குனர் ராஜு முருகன் பணியாற்றி உள்ளார்.