நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!

விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவன் தாயிடம் செல்ல மறுப்பதாகக் கூறி, ஒப்படைக்காமல் உள்ளனர். அத்துடன் வனிதா கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி வழக்கு தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இதற்காக நீதிமன்றத்துக்கு வந்த நடிகை வனிதா, நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











