Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அந்தக் குழந்தைகளை பாதுகாக்கணும்.. நானும் மனுஷிதான்.. சூரியா தேவிக்கு உதவ முன் வந்த நடிகை வனிதா!
சென்னை: தன்னை விமர்சனம் செய்த சூரியா தேவிக்கு உதவ முன் வந்துள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.
அடப்பாவமே.. இன்னொரு பிரபல இயக்குனருக்கும் கொரோனா.. வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை!
சூரியா தேவி
இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியா தேவி என்ற பெண்ணும் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.
சூரியாதேவி கைது
வனிதாவும் அதற்குப் பதிலளித்து, பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். பின்னர், சூர்யா தேவி மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வனிதா. அந்தப் புகாரில், தன்னைப் பற்றி சூரியாதேவி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் வனிதா மீதும், சூரியா தேவி புகார் அளித்தார். பின்னர் சூரியாதேவி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
நாஞ்சில் விஜயன்
இந்நிலையில் அவருக்கும் அவரை விசாரித்த பெண் போலீசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தாமல் தலைமறைவானார். இந்நிலையில் சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் நெருக்கமாக அமர்ந்து, மது அருந்துவது போன்ற புகைப்படத்தை நடிகை வனிதா வெளியிட்டார். அது அவர்கள் ஜூஸ் குடிக்கும் போட்டோ என்பதை அவர்கள் தெரிவித்தனர்.
மன்னிப்புக் கேட்டார்
இதையடுத்து நாஞ்சில் விஜயன், வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டார். இப்போது சூரியாதேவி தனக்கு முன் ஜாமின் வாங்க உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகரிடம் யூடியூப் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் நடிகை வனிதாவிடம் ட்விட்டரில் ஒருவர், சூரியாதேவிக்கு ஆதரவாக கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அவருக்கு உதவுங்கள்
அதில், சூரியாதேவி இந்தப் பிரச்னையில் அம்பு மட்டுமே. அவரது விமர்சனத்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இப்போது அவர் நிலைமை சரியாக இல்லை. அவர் மீதான எஃப்.ஐ.ஆர், அவரை விளிம்புக்கு தள்ளுகிறது. பெரிய மனது பண்ணி அவருக்கு உதவுங்கள். அவருக்கு இப்போது சிகிச்சை தேவை' என்று கூறியிருந்தார்.
நானும் மனுஷிதான்
இதையடுத்து நடிகை வனிதா, 'இதுபற்றி ஏற்கனவே அதிகாரிகளிடம் பேசிவிட்டேன். சூரியாதேவிக்கு உதவி செய்ய, முதலில் அவர் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதோடு விளையாடிக் கொண்டிருப்பதற்கு கொரோனா ஒன்றும் சாதாரண வைரஸ் அல்ல. அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு நான் நிச்சயமாகத் தூண்டமாட்டேன். நானும் மனுஷிதான் என்று கூறியுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!