Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தம்பி தங்கைகளே இதுக்காக நாம வெட்கப்படனும்.. நெட்டிசன்களை பாய்ந்து பிராண்டிய வனிதா!
Recommended Video
சென்னை: நெட்டிசன்களை கடுமையாக சாடியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா, கொளுத்திப் போட்டு சண்டை மூட்டி விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். வனிதாவின் நடவடிக்கையால் பிபி ஏறிய பார்வையாளர்கள் அவரை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றினர்.
வனிதாவை, சண்டைக்காரி, பஜாரி என்றெல்லாம் வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த போதும் வனிதா இதே வேலையைதான் செய்தார்.
தளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்
கட்ஸி விருது
இதனால் பிக்பாஸ் சீசன் 3யில் அதிகமாக திட்டு வாங்கிய போட்டியாளர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர் வனிதா. இதற்காகவே அவருக்கு பிக்பாஸ் ஃபைனலின் போது கட்ஸி விருது கொடுக்கப்பட்டது.
கிண்டல் கேலி
இந்நிலையில் நெட்டிசன்களை கடுமையாக சாடியிருக்கிறார் வனிதா. அதாவது, கொரியன் பாப் பாடகியான 25 வயதான இளம்பெண் சல்லி, சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் கேலிக்கு ஆளானார்.
மர்ம மரணம்
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சல்லி சியோலில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சல்லி வீட்டிற்கு சென்ற, அவரது மேனேஜர் சல்லி இறந்துகிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தற்கொலை
சல்லியின் மரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார், சமூக வலைதளங்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
|
வெட்கப்படனும்..
இந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள வனிதா, டிவிட்டர் குடும்பத்தில் உள்ள தம்பி தங்கைகளே, இதுபோன்றவற்றிற்கு நெட்டிசன்கள் தான் காரணம் என கூறப்படுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். மேலும் இது பிக்பாஸ் 3 அல்ல இது உண்மையான வாழ்க்கை என பதிவிட்டிருக்கிறார்.