Don't Miss!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தம்பி தங்கைகளே இதுக்காக நாம வெட்கப்படனும்.. நெட்டிசன்களை பாய்ந்து பிராண்டிய வனிதா!
Recommended Video
சென்னை: நெட்டிசன்களை கடுமையாக சாடியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா, கொளுத்திப் போட்டு சண்டை மூட்டி விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். வனிதாவின் நடவடிக்கையால் பிபி ஏறிய பார்வையாளர்கள் அவரை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றினர்.
வனிதாவை, சண்டைக்காரி, பஜாரி என்றெல்லாம் வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த போதும் வனிதா இதே வேலையைதான் செய்தார்.
தளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்
கட்ஸி விருது
இதனால் பிக்பாஸ் சீசன் 3யில் அதிகமாக திட்டு வாங்கிய போட்டியாளர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர் வனிதா. இதற்காகவே அவருக்கு பிக்பாஸ் ஃபைனலின் போது கட்ஸி விருது கொடுக்கப்பட்டது.
கிண்டல் கேலி
இந்நிலையில் நெட்டிசன்களை கடுமையாக சாடியிருக்கிறார் வனிதா. அதாவது, கொரியன் பாப் பாடகியான 25 வயதான இளம்பெண் சல்லி, சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் கேலிக்கு ஆளானார்.
மர்ம மரணம்
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சல்லி சியோலில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சல்லி வீட்டிற்கு சென்ற, அவரது மேனேஜர் சல்லி இறந்துகிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தற்கொலை
சல்லியின் மரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார், சமூக வலைதளங்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
|
வெட்கப்படனும்..
இந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள வனிதா, டிவிட்டர் குடும்பத்தில் உள்ள தம்பி தங்கைகளே, இதுபோன்றவற்றிற்கு நெட்டிசன்கள் தான் காரணம் என கூறப்படுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். மேலும் இது பிக்பாஸ் 3 அல்ல இது உண்மையான வாழ்க்கை என பதிவிட்டிருக்கிறார்.