பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன் கேரவனிலேயே சரக்கு அடித்தார் வனிதா.. விஜய் டிவி பிரபலம் பகீர்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு கேரவனில் இருந்தப்படியே நடிகை வனிதா விஜயக்குமார் சரக்கு அடித்து விட்டு சென்றதாக நாஞ்சில் விஜயன் தெரிவித்தார்.
Recommended Video
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. அவரது திருமணத்தை ஒட்டி எழுந்த விமர்சனங்களும் சர்ச்சைகளும் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது.
யூட்யூப் பிரபலமான சூர்யா தேவி வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டிருந்தார். மேலும் ஆபாச வார்த்தைகளாலும் திட்டி தீர்த்தார்.

விஜய் டிவி பிரபலம்
இதனால் கடுப்பான வனிதா சூர்யாதேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் குறித்து போலீஸில் புகார் அளித்தார். அப்போது சூர்யா தேவி குறித்து பேசிய வனிதாவும் அவரது வழக்கறிஞரும் தன்னைப்பற்றி பேசினால் பிரபலமாகலாம் என சூர்யா தேவியும் விஜய் டிவி பிரபலமான விஜயனும் தன்னைப் பற்றி அவதூறு பேசுவதாக கூறினர்.

ஒரு முறை பேட்டி
இந்நிலையில் வனிதாவின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த நாஞ்சில் விஜயன், வனிதா தன்னைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதாக தெரிவித்தார். தனது யூட்யூப் சேனலுக்காக ஒரு முறை சூர்யாதேவியை ஒரு பேட்டி எடுத்ததோடு சரி என்றார்.

கேரவன்லேயே சரக்கு
மேலும் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வனிதா அவ்ளோ சிகரெட் பிடிச்சாங்க. அதைப்பத்தி நான் ஏதாவது சொல்லியிருக்கேனா? பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி கூட வனிதா கேரவன்ல உட்காந்து சரக்கு அடிச்சுட்டுதான் போனாங்க. அவங்கக்கிட்ட என்னை பத்தின ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க.

ரிலீஸ் பண்ணட்டுமா?
பிக்பாஸ் வீட்டுல சரக்கடிச்சுட்டு அவங்க கும்மாளம் போட்ட வீடியோலாம் என்கிட்ட இருக்கு. நான் அதை ரிலீஸ் பண்ணட்டுமா என கேட்டுள்ளார். ஏற்கனவே நடிகை வனிதா - சூர்யா தேவி இடையே சமாதானம் ஏற்படுத்த போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பகீர் கிளப்பிய விஜயன்
இதனால் அவர்களுக்குள்ளான வார்த்தைப் போர் அதிகரித்து வரும் நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயனும் தற்போது வனிதா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பகீர் கிளப்பியுள்ளார். இதன் காரணமாக வனிதா விவகாரம் மீண்டும் பரபரக்க ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications











