Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கல.. என்னை யாரும் ஏமாத்தல.. நான் ஏமாறல.. விளாசி தள்ளிய வனிதா!
சென்னை: நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் சர்ச்சையாகியுள்ள நிலையில், அதுகுறித்து தவறாக கமெண்ட் பதிவிடுபவர்களை விளாசி தள்ளியிருக்கிறார் நடிகை வனிதா.
Recommended Video
நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை பீட்டர் திருமணம் செய்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளர்.
டாக்டர், நர்ஸ் கவனிப்பதில்லை.. மருத்துவமனையில் தற்கொலை எண்ணம் வருகிறது.. கொரோனா பாதித்த நடிகை பகீர்
வனிதா வீடியோ
இதனால் வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது. தன்னுடைய திருமணத்தில் உள்ள பிரச்சனை குறித்து பேசுபவர்களை சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்கி வருகிறார் வனிதா. அந்த வகையில் தனது திருமணம் குறித்து தவறாக பேசுபவர்களுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா.
தவறாக புரிந்தவர்கள்
தனது யூட்யூப் சேனலில் தனது மகள் ஜோவிகாவுடன் லைவில் பங்கேற்றால் நடிகை வனிதா. அப்போது அவர் பேசியதாவது, எனக்கு உண்மையா இருப்பவர்களுக்கும் தன்னை புரிந்து கொண்டவர்களுக்கும் நன்றி. நிறைய பேர் என்னுடைய திருமணத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு பதில் சொல்கிறேன்.
ஒரே நைட்டில்..
ஒரே நைட்டில் பலரின் வாழ்க்கையே மாறியிருக்கு. கணவர், வேலை, சொகுசான வாழ்க்கை என இருந்தவர்களுக்கு மறுநாள் காலையில் அவர் கணவர் இல்லாமல் போயிருக்கிறார். கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிப் போய் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கை அப்படி மாறியிருக்கிறது.
குடும்பத்தை கெடுக்கவில்லை
எனக்கு கடவுள் மீது மட்டும் தான் நம்பிக்கை உள்ளது. மத நம்பிக்கை எனக்கில்லை. அப்படிதான் நான் வளர்க்கப்பட்டேன். யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கவில்லை. இப்பவும் நான் என்னை பற்றி தவறா கமெண்ட் செய்பவர்களுக்குகாகதான் பேசுகிறேன். என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நானும் கம்ப்ளையன்ட் கொடுக்கலாம்
சரி நான் ஒரு தவறு செய்கிறேன், சட்டத்திற்கு புறம்பாக ஒரு வேலையை செய்கிறேன், ஒரு குற்றம் செய்கிறேன் என்றால் இன்விடேஷன் கொடுத்தா செய்வேன்? லைவில் மேக்கப் போட்டு பல வெளிப்படையாக செய்திருக்கிறேன். நான் 10 கம்ப்ளையன்ட் கொடுக்கலாம். என் பப்ளிசிட்டியை பெருக்கி கொள்ளலாம். இப்போ பாலிவுட் வரைக்கும் பாப்புலர் ஆயிட்டேன். அடுத்த இன்டர்நேஷனல் லெவலில் பாப்புலர் ஆகலாம்.
நான் சினிமாக்காரிதான்
பப்ளிசிட்டிக்காக யார் வேண்டுமானாலும் கம்ப்ளையன்ட் கொடுக்கலாம். இதெல்லாம் உனக்கு புதுசான்னு நீங்க கேட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆமாம் நான் சினிமாக்காரி தான். சினிமா குடும்பத்துல பிறந்தவதான் நான் யாரையும் ஏமாத்தல, நேர்மையா இருக்கேன். உண்மையா இருக்கேன்.
7 மாசமா தெரியும்
40 வயசுல ஒருத்தர் என்ன ஏமாத்த முடியாது. பீட்டர் பால 6, 7 மாசமா தெரியும். பெரிய படங்கள்ல வொர்க் பண்ணியிருக்காரு. ஷங்கரோட சிவாஜி படத்துல வொர்க் பண்ணியிருக்காரு. பாலிவுட்ல நிறைய படங்கள் பண்ணியிருக்கார். ஹாரிபாட்டர் மற்றும் பல டிஸ்னி புராஜெக்ட் பண்ணியிருக்கார்.
எப்படி ஆகாம இருக்கும்?
அவருக்கு கல்யாணம் ஆனது எனக்கு ஏற்கனவே தெரியும், 40 வயசு வரைக்கும் எந்த ஆம்பளைக்கு கல்யாணம் ஆகாம இருக்கும்? அவருக்கு மனைவி இருக்குறது, ஒரு மகன் மகள் இருக்குறது எனக்கு தெரியும். அவரோட பையன பாத்திருக்கிறேன் மகள தெரியும். அவரு பையன் தினமும் இன்ஸ்டா மற்றும் வாட்ஸ்அப்ல என் குழந்தைங்க கூட பேசிட்டு இருக்காங்க.
ஏழரை வருஷமா பிரச்சனை
என்னோட அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வோர்டு கூட என் பிள்ளைங்க அவருக்கு கொடுத்திருக்காங்க. என் குழந்தைங்களும் அவருடைய குழந்தைகளும் பிரண்ட்ஸ். பீட்டர் பாலுக்கும் அவரோட வொய்ஃப்க்கும் ஏழரை வருஷமா பேச்சு வார்த்தை இல்லை. அவங்களுக்குள்ள பெரிய பிரச்சனை இருக்கு. அதை சொல்ல எனக்கு உரிமையில்லை. இவ்வாறு பேசியிருக்கிறார் வனிதா.