Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வந்தனா நீதிமன்றத்தில் சரண்
சென்னை:
ஸ்ரீகாந்த் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற அவரது மனைவி வந்தனா, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று சைதாப்பேட்டை நீதிதமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
காக்கிநாடாவில் வைத்து வந்தனாவை, ரகசியத் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீகாந்த். ஊர், உலகத்திற்காக ஒரு திருமணத்தையும் இரு வீட்டாரும் இணைந்து அறிவித்தனர்.இந்த நிலையில்தான் வந்தனா குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் வந்தனாவிடமிருந்து பிரிய முடிவு செய்தார் ஸ்ரீகாந்த்.
ஆரம்பத்தில் பொறுமை காத்த வந்தனா, பின்னர் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த் குடும்பத்தினல் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் வந்தனா, ஸ்ரீகாந்த்தின் முறைப்படியான மனைவி என்பதால் வெளியேற்ற முடியாது என்று கூறி விட்டது போலீஸ்.
இதையடுத்து தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி ஸ்ரீகாந்த்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வந்தனா உயர்நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் கோரினார். உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தனா சரணடைந்தார். பின்னர் அவர் சார்பில் இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்தனாவுக்கு நீதிபதி முன்ஜாமீன் வழங்கினார்.
வடபழனி காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என வந்தனாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!