Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஸ்ரீரெட்டி பட தலைப்புக்கு எதிர்ப்பு!
ரெட்டி டைரி தலைப்புக்கு வாராகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
சென்னை: ரெட்டி டைரி திரைப்பட தலைப்புக்கு தடைவிதிக்க வேண்டுமென தயாரிப்பாளர் வாராகி கோரியுள்ளார்.
தமிழ், தெலுங்கு நடிகர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இப்போது அவருடைய நடிப்பில் ரெட்டி டைரி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.
ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் கதையமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அலாவுதீன் இயக்குகிறார்.
தற்போது ரெட்டி என்ற பெயரை படத்தின் தலைப்பிற்கு பயன்படுத்த கூடாது என தயாரிப்பாளர் வாராகி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம் சேம்பரில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், ஸ்ரீரெட்டி திரையுலகில் உள்ள முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி அதன் மூலம், பணம் பறிப்பது மற்றும் சினிமா வாய்ப்பு பெறுவது போன்ற செயல்களில் இறங்கியுள்ளதாக தெரிவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை நிகழ்வுகளை படமாக எடுப்பதிலும், அதில் ஸ்ரீரெட்டி நடிப்பதிலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ரெட்டி டைரி என்று பெயர் வைத்து ஒரு சமுதாயத்தினரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயம் இப்படம் குறிப்பிட்ட சமுதாயத்தினரை பெருமைபடுத்தும் விதமாக இருக்காது எனத் தெரிகிறது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக இருக்கக் கூடாது என்றும், அதனால் ரெட்டி டைரி என்ற டைட்டிலை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும், சமூக நலன் கருதியே இந்த கோரிக்கையை வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.