Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புருஷன் அடித்தால் தைரியமா திருப்பி அடிங்க: பெண்களுக்கு வரலட்சுமி அறிவுரை
Recommended Video
சென்னை: கணவர் அடித்தால் திருப்பி அடிக்குமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
தனது அப்பா திரைத்துறையில் இருப்பது தெரிந்தும் ஒருவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததை தைரியமாக அனைவரிடமும் கூறினார் வரலட்சுமி சரத்குமார். அவர் சேவ் சக்தி என்ற அமைப்பை துவங்கி நடத்தி வருகிறார்.
அந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார் வரலட்சுமி.
சென்னை
மகளிர் தினத்தை முன்னிட்டு சேவ் சக்தி(Save Sakthi) அமைப்பு சார்பில் சென்னை வியாசர்பாடியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மதிப்பு
எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வரலட்சுமி வலியுறுத்தினார்.
மனைவி
கணவன் அடித்தால் மனைவி சும்மா இல்லாமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறினார். பெண்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உதவி
பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் வரலட்சுமி. கணவனை திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறியதை வைத்து நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்துள்ளனர்.
அந்த பயம் இருக்கட்டும்
வரலட்சுமியும் வாரிசு நடிகர் ஒருவரும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. வரலட்சுமியின் நேற்றைய பேச்சை கேட்ட பிறகு நடிகருக்கு பயம் வந்திருக்கும் என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்ஸ்.