10 லட்சம் ஃபாலோயர்ஸ்...இன்ஸ்டாகிராமர் ரசிகர்களுக்கு வரலட்சுமி நன்றி
சென்னை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழிலில் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர்.
அதற்கு பிறகு கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி, 2016 ல் நடித்த தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் வரலட்சுமி. அதன் பிறகு நடித்த விக்ரம் வேதா படம் இவருக்கு விருதினை பெற்று தந்தது.

தொடர்ந்து எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்க்கார், மாரி 2, நீயா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி, தற்போது வில்லி வேடங்களிலேயே அதிகம் நடிக்கிறார். இந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்துள்ளன.
தற்போது தமிழில் 5 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருப்பதால் மிக அரிதாகவே சமூக வலைதளங்கள் பக்கம் தலை காட்டுவார். இருந்தாலும் தெலுங்கில் இவர் நடித்து சமீபத்தில் வெளி வந்த நந்தி படம், பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இதனால் வரலட்சுமிக்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம்.
இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் வரலட்சுமியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உள்ளது. இதற்காக தனது க்யூட்டான ஃபோட்டோவுடன், ரசிகர்களுக்கு வரலட்சுமி நன்றி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 10 லட்சம் இதயங்கள். உங்கள் அன்பிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











