Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை!
சென்னை: தனது சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். சிம்பு ஹீரோ.

தாரை தப்பட்டை
இதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி 2, விஜய்யின் சர்கார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஆகிறார்
தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்கி நடிப்பதாக செய்தி வெளியானது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

முடக்கி உள்ளனர்
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி, சமூக பிரச்சினைகள் குறித்த கருத்துகளை, தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில், அவருடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை யாரோ முடக்கி உள்ளனர்.

எச்சரிக்கையாக இருங்கள்
இதை வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு முடக்கப்பட்டுள்ளன. அதை மீட்கும் வேலைகள் நடந்துவருகின்றன. அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதுவரை என் சமூக வலைதள கணக்குகளில் வரும் பதிவுகள், செய்திகள் பற்றி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
Recommended Video

அதிகரித்து வருகிறது
நிலைமை சீரானதும் நானே தெரிவிக்கிறேன். தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார். சினிமா நடிகர், நடிகைகளின் சமூக வலைதளக் கணக்குகளை ஹேக் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.