Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை!
சென்னை: தனது சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். சிம்பு ஹீரோ.
தாரை தப்பட்டை
இதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி 2, விஜய்யின் சர்கார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் ஆகிறார்
தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்கி நடிப்பதாக செய்தி வெளியானது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
முடக்கி உள்ளனர்
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி, சமூக பிரச்சினைகள் குறித்த கருத்துகளை, தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில், அவருடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை யாரோ முடக்கி உள்ளனர்.
எச்சரிக்கையாக இருங்கள்
இதை வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு முடக்கப்பட்டுள்ளன. அதை மீட்கும் வேலைகள் நடந்துவருகின்றன. அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதுவரை என் சமூக வலைதள கணக்குகளில் வரும் பதிவுகள், செய்திகள் பற்றி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
Recommended Video
அதிகரித்து வருகிறது
நிலைமை சீரானதும் நானே தெரிவிக்கிறேன். தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார். சினிமா நடிகர், நடிகைகளின் சமூக வலைதளக் கணக்குகளை ஹேக் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.