Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சமுத்திரக்கனி ஆணாதிக்கம் மிக்கவரா... என்ன சொல்ல வருகிறார் வரலட்சுமி?
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்களுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது என்று கூறி, சமுத்திரக்கனியின் மலையாளப் படத்திலிருந்து நடிகை வரலட்சுமி விலகியுள்ளார்.
சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த 'அப்பா' படம் தமிழில் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு 'ஆகாச மிட்டாய்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்போது படத்தில் இருந்து வரலட்சுமி விலகிவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது," என்றார்.
படத்தை தயாரித்து இயக்குபவர் சமுத்திரக்கனிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணாதிக்கம் மிகுந்தவர் என சமுத்திரக்கனியைச் சொல்கிறாரா அல்லது தனக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயராமைச் சொல்கிறாரா?
தன்னைப் புரிந்து கொண்டு, படத்திலிருந்து விலக அனுமதித்ததற்கு சமுத்திரக்கனி மற்றும் ஜெயராமுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் வரலட்சுமி. சொல்றத தெளிவாச் சொல்லிட்டுப் போகக் கூடாதா?!