Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சமுத்திரக்கனி ஆணாதிக்கம் மிக்கவரா... என்ன சொல்ல வருகிறார் வரலட்சுமி?
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்களுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது என்று கூறி, சமுத்திரக்கனியின் மலையாளப் படத்திலிருந்து நடிகை வரலட்சுமி விலகியுள்ளார்.
சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த 'அப்பா' படம் தமிழில் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு 'ஆகாச மிட்டாய்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்போது படத்தில் இருந்து வரலட்சுமி விலகிவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது," என்றார்.
படத்தை தயாரித்து இயக்குபவர் சமுத்திரக்கனிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணாதிக்கம் மிகுந்தவர் என சமுத்திரக்கனியைச் சொல்கிறாரா அல்லது தனக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயராமைச் சொல்கிறாரா?
தன்னைப் புரிந்து கொண்டு, படத்திலிருந்து விலக அனுமதித்ததற்கு சமுத்திரக்கனி மற்றும் ஜெயராமுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் வரலட்சுமி. சொல்றத தெளிவாச் சொல்லிட்டுப் போகக் கூடாதா?!