Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Varmaa- என்னாது வர்மா கைவிடப்பட்டதா, சொல்லவே இல்லை: ஹீரோயின் அதிர்ச்சி
கொல்கத்தா: வர்மா படம் கைவிடப்பட்டது அதன் ஹீரோயினான மேகா சவுத்ரிக்கு தெரியாதாம்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா கைவிடப்பட்டுள்ளது. பாலா இயக்கிய இந்த படத்தில் த்ருவுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடித்திருந்தார். படம் முழுக்க எடுத்த பிறகு திருப்தியாக இல்லை என்று தெரிவித்துவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
இதையடுத்து த்ருவ் விக்ரமை வைத்து வேறு ஒரு இயக்குனர் வர்மாவை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகா சவுத்ரி
வர்மா படம் கைவிடப்பட்ட தகவல் மேகா சவுத்ரிக்கு தெரியாதாம். நீங்கள் நடித்த வர்மா படம் கைவிடப்பட்டுள்ளது பற்றி என்னை நினைக்கிறீர்கள் என்று கேட்டவர்களிடம் என்னது படம் கைவிடப்பட்டதா என்று பாவம் போன்று கேட்டுள்ளார் மேகா.
ஹீரோ
மீண்டும் எடுக்கப்படும் வர்மா படத்தில் த்ருவ் விக்ரம் இருக்கிறார் என்று தான் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலா இல்லை என்பது தெரியும். ஆனால் ஹீரோயினும் மாற்றப்படுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வேறு ஹீரோயின்
படம் கைவிடப்பட்டதை ஹீரோயினிடமே கூறவில்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் படத்தில் அவர் இருக்க மாட்டார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. பாவம் பல கனவுகளுடன் வந்த நடிகையின் நிலை இப்படி ஆகிவிட்டதே.
வேண்டாம்
அர்ஜுன் ரெட்டி படத்தை எல்லாம் ரீமேக் செய்யக் கூடாது. சில படங்களை ரீமேக் செய்யாமல் இருப்பது தான் நல்லது. த்ருவை வைத்து வேறு ஏதாவது படத்தை எடுக்கலாம் என்று நெட்டிசன்கள் ஐடியா கொடுத்துள்ளனர்.
வர்மா
பாலா ஒழுங்காக எடுக்காததால் வர்மா கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த படத்தை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது. பாலா இயக்கிய வர்மா படத்தை ரிலீஸ் செய்தால் அதில் அவர் அப்படி என்ன தான் தவறு செய்தார் என்பதை பார்க்க தியேட்டர்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.