Don't Miss!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா: ட்வீட் செய்த த்ரிஷாவின் மாஜி மாப்பிள்ளை
சென்னை: மயக்கமா கலக்கமா பாடல் வரிகள் குறித்து த்ரிஷாவின் முன்னாள் மாப்பிள்ளை வருண் மணியன் ட்வீட் செய்துள்ளார்.
த்ரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை பிரிந்த வேகத்தில் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது காதல் வயப்பட்டார். காதல் மலர்ந்த வேகத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயதார்த்தம் நடந்த சூட்டோடு த்ரிஷாவும், வருண் மணியனும் பிரிந்துவிட்டனர்.
பட வாய்ப்புகள்
திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதனால் உடனே திருமணத்தை நடத்த வேண்டும் என்ற வருண் மணியன் வீட்டாரின் கோரிக்கை அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
ட்விட்டர்
திருமணம் நிச்சயம் ஆன பிறகு த்ரிஷாவின் ட்வீட்களை வருணும், வருணின் ட்வீட்களை த்ரிஷாவும் ரீட்வீட் செய்து வந்தனர். தற்போது அது எல்லாம் நின்றுவிட்டது.
|
மயக்கமா கலக்கமா
த்ரிஷாவுக்கும் வருணுக்கும் இடையே ஒரு மாதமாக பேச்சு இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கு பிடித்த பாடல் மயக்கமா கலக்கமா. அதில் வரும் வரி உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
|
ஜெய்
ஜெய்யை வைத்து வருண் மணியன் தயாரித்து வரும் படத்தில் நடிக்க த்ரிஷா மறுத்துவிட்டார். இதையடுத்து தான் டாப்ஸியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் வாழ்த்துக்கள். ஜெய், இயக்குனர் திரு, டாப்ஸி, சுஷாந்த் பிரசாத்துக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
த்ரிஷா
திருமணம் நின்ற பிறகு வந்த பிறந்தநாளை த்ரிஷா தனது தோழிகளுடன் ஜாலியாக கொண்டாடியுள்ளார். தற்போது அவரை தேடி கூடுதலாக பட வாய்ப்புகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.