Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பணம் பணம் என ஓடும் மக்களே, இதை முதலில் படிங்க!
சென்னை: பணத்திற்கு கொடுக்கும் மதிப்பை மக்கள் குடும்ப உறவுகளுக்கு கொடுப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர், உலகம் எல்லாம் பணம் பணம் என்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் வாழ்வில் பல சந்தோஷங்களை தொலைத்துவிட்டு நிற்கிறோம்.
இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் ஃபேஸ்புக் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
உண்மை சம்பவம்
நேற்று பிரபஞ்சன் தலைமையேற்ற கவிஞர் நரனின் லாகிரி கவிதை விமர்சனக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
அப்போது பிரபஞ்சன் ஒரு உண்மை சம்பவத்தை கூறினார்.
அமெரிக்கா
மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மனைவியின் இறப்புக்கு பிறகு அப்பா தனியாக வாழ்கிறார். தனிமை அவரை தொந்தரவு செய்கிறது.
மகன்
வாரம் ஒரு முறை பேசும் மகனிடம் சொன்னார். தம்பி! உங்க அம்மா போன பிறகு இங்க தனியா இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு...அங்க அமெரிக்கா வந்து உன்னோட இருந்தன்ன பேரபிள்ளைகளை பார்த்துக்கொண்டு சந்தோசமாயிருப்பேன். நான் தனியா தான
இங்க இருக்கேன். அங்க வந்துர்றேன் என்று சொல்லி முடிப்பதற்குள் மகன் பேச்சை மறுத்தான். No No No No No No daddy. Death is very costly affair here.no... no...ஏகப்பட்ட பார்மாலிட்டிஸ் here.
இந்தியா
நீங்க அங்க இந்தியாலயே இருங்க மாதம் ரெண்டாயிரம் சேத்து அனுப்புறேன். புத்தகங்களை வாங்கி படிங்க.சினிமாக்கு போங்க.பூங்காக்கு போங்க.கோயில் கொளத்துக்கு போங்க...எவனாவது வடஇந்தியா டூர் போட்டு இருப்பான் போயிட்டு வாங்க.நெட்டுல பாத்துட்டு வேணா நான் சொல்றேன்...என்று மகன் பேசி முடித்தான். அப்பாக்கு குரல் கிணற்றுக்குள் போயிவிட்டது. அப்பா போன வெச்சுறேன் ஆபிஸ் கால் ஒன்னு வருது என்றபடி மகன் போனை வைத்துவிட்டான்.
அப்பா
அந்த அப்பா கண்ணீர் விட்டபடியே இந்த நிகழ்வை பிரபஞ்சனிடம் கூறினாராம். பிரபஞ்சன் சொன்னார் ஒவ்வொரு உயிரும் தனியானது. மகன் என்றாலும் அவன் தனி மனிதன் தான். பணம் சம்பாரிக்க வேண்டும் என்று பள்ளி வீடு சமுதாயம் அனைவரும் சொல்லிக் கொடுத்தோம். உறவுகள் முக்கியமுன்னு சொல்லி கொடுக்க மறந்து விட்டோம். அதனால் டாலர்களை பார்த்தவண்ணம் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்றாராம்.
எதை விதைத்தோமோ அதை தான் அறுக்கமுடியும்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!