Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சமூக விலகல்.. ஒரே நாள்ல இப்படி கேள்விக்குரியதா மாத்திட்டாங்களே..? இயக்குனர் வசந்தபாலன் வருத்தம்!
சென்னை: இத்தனை நாள் கடைப்பிடித்த சமூக விலகல் ஒரே நாளில் கேள்விக்குரியதாக மாறியது வருத்தம் தருகிறது' என்று இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.
Recommended Video
கொரொனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (26) முதல் 29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திடீரென கூடிய மக்கள் கூட்டம்.. 4 நாளைக்கும் பிரியாணி சமைக்க போறாங்களா? வெங்கட்பிரபு கிண்டல்!
வசந்தபாலன்
சேலம், திருப்பூரில் வரும் 28-ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால், அதிர்ச்சி அடைந்த மக்கள், சென்னையில் இன்று காலை முதலே கடைகளில் கூடிவிட்டனர். சமூக விலகல் பற்றி கவலைப்படாமல் பொருட்களை வாங்க முண்டியடித்தனர். இதனால், இத்தனை நாள் கடைபிடித்த சமூக விலகல் கேள்விகுறியாகிவிட்டது என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
நிறைந்து வழிந்தன
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: நாளை முதல் அடுத்த நான்கு நாட்கள் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என்ற அரசின் திடீர் அறிவிப்பு நேற்றிரவு முதல் பெரும் பதட்டத்தை உண்டாக்கி விட்டது. காலை, சென்னை கே.கே நகரில் உள்ள அனைத்து சிறு பெரு மளிகை கடைகளும் காய்கறி கடைகளும் நிறைந்து வழிந்தன.
மக்களிடம் பதட்டம்
போக்குவரத்து நெரிசல் ஏறபட்டுவிட்டது. கொரோனோ நம்மை தாக்கிவிடும் என்கிற பயத்தை மறந்து இந்த நான்கு நாட்கள் நமக்கு உணவு எதுவும் கிடைக்காமல் போய்விடப்போகிறது என்கிற பதட்டமே மக்களிடம் மேலோங்கி இருப்பதைக் கண்டேன். காலை 830 மணிக்கு சிறிய காய்கறிக்கடை ஒன்றில் வரிசையில் நின்றேன். ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நிறைந்து வழிந்தது.
வருத்தம் தருகிறது
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரிசையில் நின்றேன். மக்கள் வாங்கிக் குவித்தார்கள். மிஞ்சிய காய்களை வாங்கி விட்டு வீடடைந்தேன். இத்தனை நாள் நாம் கடைப்பிடித்த சமூக விலகல் மற்றும் ஒழுங்கு இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது என்பதுதான் வருத்தம் தருகிறது' என்று அவர் கூறியுள்ளார்.