Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது தாங்க உண்மையான நட்பு.. கொரோனா தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்று வசந்தபாலனை சந்தித்த லிங்குசாமி!
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் வசந்தபாலனை மருத்துவமனை உடன் போராடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், இயக்குநர் வசந்தபாலன் தனது நண்பன் லிங்குசாமிக்கு எழுதியுள்ள நன்றி கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷங்கருக்கு லைகா வைத்த அடுத்த 'செக்'... முற்றுகிறது இந்தியன் 2 விவகாரம்
வீரன் டா.. சாமிடா.. லிங்குசாமிடா.. நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய் என வசந்தபாலன் லிங்குசாமியை கொண்டாடி உள்ளார்.
வசந்த பாலனுக்கு கொரோனா
வெயில், அங்காடி தெரு, ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வசந்தபாலன். குதிரையை போல மீண்டும் எழுந்து வருவேன் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கை பதிவையும் போட்டு இருந்தார்.
லிங்குசாமி நேரில் ஆறுதல்
கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் வசந்தபாலனை அவரது உயிர் நண்பரும் இயக்குநருமான லிங்குசாமி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். லிங்குசாமியின் அந்த நட்பை பாராட்டும் விதமாக தற்போது கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட வசந்தபாலன் எழுதியுள்ள கவிதை வைரலாகி வருகிறது.
வீரம் என்றால் என்ன?
வீரம் என்றால் என்ன? பயமில்லாத மாதிரி நடிக்கிறது. பழைய வசனம். வீரம் என்றால் என்ன தெரியுமா? பேரன்பின் மிகுதியில் நெருக்கடியான நேரத்தில் அன்பானவர்கள் பக்கம் நிற்பது புதிய வசனம் என மருத்துவமனையுடன் போராடி தன்னை பார்க்க வந்த வீரன் லிங்குசாமி என பாராட்டி உள்ளார்.
இரவு மிருகமாய்
போன வாரத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று இரவு முழுக்க நித்திரையின்றி இரவு மிருகமாய் உழண்டவண்ணம் இருக்கிறது. விடிந்தும் விடியாததுமாய் அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது என தனக்காக தவித்த லிங்குசாமியை நினைத்து உருகி உள்ளார் வசந்தபாலன்.
Recommended Video
ஆண் பென்குயின்
உங்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்க, மருத்துவ நிர்வாகத்திடம் கொஞ்சம் நேரமாவது பார்த்து விட்டு செல்கிறேனே என கெஞ்ச முழு மருத்துவ உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. ஆண் பென்குயின் போன்று தோற்றமளிக்கிறது என்று வர்ணித்துள்ளார்.
வீரன்டா.. சாமிடா.. லிங்குசாமிடா ..! நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய் !! நண்பன் டைரக்டர் லிங்குசாமியெய் இணையதளத்தில் கொண்டாடிய, கொரோனா நோயிலிருந்து மீண்ட டைரக்டர் வசந்தபாலன். Vasantabalan1 dirlingusamy #CoronaUpdates pic.twitter.com/x3PQDkJtd1
— Johnson PRO (johnsoncinepro) May 15, 2021
ஆயிரம் முத்தங்கள் லிங்கு
நானிருக்கிறேன்.. நாங்களிருக்கிறோம் என்றபடி ஒரு சாமி என் அறையை விட்டு வெளியேறியது. கோடிக்கணக்கான நட்பின் கரங்கள் எனை அணைத்தது போன்று இருந்தது. ஆயிரம் முத்தங்கள் லிங்கு.. ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய் என தனது நண்பனை கொண்டாடி தீர்த்துள்ளார் வசந்தபாலன்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!