Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காற்று இவரிடம் ஒலியாய்த் தெறிக்கும்.. தேனாய் இனிக்கும்.. இளையராஜாவுக்கு திருமா பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா இன்று தனது 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா.
ராகதேவனுக்கு இன்று பிறந்த நாள்..பார்த்திபனின் வாழ்த்து மழையில் நனைந்த இசைஞானி!
7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் கம்போஸ் செய்துள்ள இளையராஜா, 20000 மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன் இளையராஜாவுக்கு டிவிட்டரில் கவிதை மொழியில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது,
காற்றும் ஒலியும்
இவரது
கைவிரல்அசைவுகளின் கட்டுப்பாட்டில்
காற்றுஇவரிடம்
ஒலியாய்த்தெறிக்கும்
தேனாய்இனிக்கும்
பறையில்அதிரும்
குழலில் குழையும்
இழையில் இழையும்
இசையாய்ப் பெருகும்
இசைவாய் இசையும்
தமிழில் கரையும்
தமிழும் கரையும்
உயிராய் உருகும்
உயிர்களும் உருகும்..
இவ்வாறு திருமாவளவன், இளையராஜாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.