Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வியக்க வைக்கும் “வேதாளம்” - 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி வசூலாமே!
சென்னை: அஜித் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த வேதாளம் திரைப்படம் 2 நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கைப்பற்றியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10 ஆம் தேதி வேதாளம் வெளியானது.
தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
தீபாவளி வசூல்:
தீபாவளியன்று வெளியாகி வேதாளம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 15.5 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலில் இது ஒரு புது சாதனை என்று சினிமா வட்டாரம் குதூகலித்துள்ளது.
2 நாளில் 25 கோடி வசூல்:
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவர அடிப்படையில் 2 நாள் அன்று நல்ல மழையாக இருந்த போதிலும் வேதாளம் நல்ல வசூல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் சூப்பர்:
அஜித்தின் வேதாளம் 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவிலும் இத்திரைப்படம் வசூலைக் குவித்து வருகின்றதாம்.
கொஞ்ச நாள் ஓய்வு:
இந்நிலையில், நவம்பர் 26 ஆம் தேதி காலில் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் அஜித். அறுவை சிகிச்சைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சென்னையில் ஒய்வு எடுத்துவிட்டு, பிறகு லண்டன் செல்லவிருக்கிறார்.