Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் படமாகிறது.. ராம்கோபால் வர்மா இயக்குகிறார்!
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய விவகாரம் விரைவில் படமாகிறது. இப்படத்தை பிரபல சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்குகிறார்.
அன்று சந்தனக் கடத்தல்காரராகப் பார்க்கப்பட்ட வீரப்பன் மீதான இமேஜ் இப்போது மாறி வருகிறது. வீரப்பன் தமிழ் மக்களின் காவலராகப் பார்க்கப்படுகிறார். பாமக, நாம் தமிழர் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் வீரப்பனை பெரும் வீரன் மற்றும் தமிழ் பற்றாளராகக் கொண்டாடுகின்றனர்.
2000 ஆண்டில் தமிழக எல்லையில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராஜ்குமார் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வீரப்பன் துப்பாக்கியுடன் வந்து அவரைக் கடத்திச் சென்றார். அவருடன் மேலும் மூவரையும் கடத்திச் சென்றார். நாட்டையே அதிர வைத்த கடத்தல் இது.
பெரும் முயற்சி
ராஜ்குமாரை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் பெரும் முயற்சி எடுத்தன. தூதுவர்கள் அனுப்பப்பட்டார்கள். நடிகர் ரஜினிகாந்தும் பெரும் முயற்சி செய்தார்.
108 நாட்கள்
பல கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு ராஜ்குமாரையும் மற்றவர்களையும் வீரப்பன் விடுவித்தார். காட்டுக்குள் 108 நாட்கள் ராஜ்குமார் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
ராம்கோபால் வர்மா
முழுக்க முழுக்க இந்த சம்பவத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கின்றனர். ராம்கோபால் வர்மா இயக்குகிறார். இதற்கு 'த கில்லிங் வீரப்பன்' என பெயரிட்டுள்ளனர். இதில் வீரப்பனை தேடிப் பிடித்து கொலை செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் ராஜ்குமார் மகன் சிவராஜ்குமார் நடிக்கிறார்.
முத்துலட்சுமி சம்மதம்
இந்த படத்துக்காக தகவல்கள் திரட்ட வீரப்பன் மனைவி முத்து லட்சுமியை ராம்கோபால் வர்மா சமீபத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குவது குறித்து ராம்கோபால் வர்மா கூறும் போது ‘மூன்று மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பனை பிடிக்க ரூ.600 கோடி செலவானது.
சுவாரஸ்யமான திருப்பங்கள்
16 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் 15 வருடங்கள் தேடுதல் வேட்டை நடந்தது. 1200 போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒசாமா பின்லேடனை விட 100 மடங்கு திருப்பங்கள் கொண்டது வீரப்பன் வாழ்க்கை.
வீரப்பன் பிடிப்பட்ட சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை படத்தில் கொண்டு வருவேன்," என்றார்.
தகவல்கள்
இப்படத்துக்கான நடிகர்-நடிகை தேர்வு நடந்து வருகிறது. முதலில் இந்தப் படத்துக்கு ஒத்துழைப்பு மறுத்து வந்த முத்துலட்சுமியும், இப்போது தகவல்கள் தர சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?