Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அங்காடித்தெரு... மகேஷின் அடையாளத்தை மாற்ற நினைக்கும் இயக்குனர்!
அங்காடித் தெரு மகேஷ் நடிக்கும் வீராபுரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் செங்கல்பட்டு அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை: வீராபுரம் படத்திற்கு பிறகு அங்காடிதெரு மகேஷின் அடையாளம் மாறும் என்று அப்படத்தின் இயக்குனர் செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத்தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கும் படம் "வீராபுரம்".
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. அங்காடித்தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக உறுதிகொள் மேகனா நடிக்கிறார்.
மணல் கொள்ளையால் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் வீராபுரம் திரைப்படம், சமூக பிரச்சினையை பற்றி பேசுகிறது. அத்துடன் இணைந்த ஒரு மெல்லிய காதலும் படத்தில் இருக்கிறது.
இதுவரை நடித்திடாத ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்க்குப் பிறகு மகேஷ் மிகச்சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் எனவும் வீராபுரம் மகேஷ் என்று அழைக்கப்படுவார் என்றும் இயக்குனர் செந்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பிரேம்குமார், இசையமைப்பாளர்களாக ரிதேஷ் மற்றும் ஸ்ரீதர், எடிட்டராக கணேஷ்குமார் மற்றும் சண்டைப்பயிற்சியாளராக எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.