Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சொகுசு கார் பதிவு வில்லங்கம்: நடிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை!
திருவனந்தபுரம்: போலி ஆவணங்களைக் காட்டி புதுச்சேரியில் கார்களை பதிவு செய்த வழக்கில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், அஜித் நடித்த தினா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் 'தமிழரசன்'படத்தில் நடித்துவருகிறார்.
பாஜக எம்.பியாகவும் இருக்கும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன், 2 சொகுசு கார்களை வாங்கினார். இந்த காரை கேரளாவில் பதிவு செய்தால், அதிக வரி செலுத்த வேண்டும் என்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பதிவுசெய்தார். இங்கு பதிவு செய்தால் குறைந்த வரித்தொகை கட்டினால் போதும். பிரபலங்கள் பலர் இப்படிச் செய்வது வழக்கம். இதற்காக புதுச்சேரியில் வசிப்பதாக, போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் கார்களை பதிவு செய்துள்ளார் சுரேஷ் கோபி.
"போதையில் என் மகள் மீது சிறுநீர் கழித்தார்.. தவறாக நடந்துகொண்டார்.." கணவர் மீது நடிகை பகீர் புகார்
இதன் மூலம் ரூ.25 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, கேரள குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் போலீசில் சரணடைந்த நடிகர் சுரேஷ் கோபி, கைதுசெய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கேரள மாநில கூடுதல் காவல்துறை இயக்குனர் டோமின்.ஜே.தக்கன்சேரி தெரிவித்துள்ளார்.
இதே போன்ற, போலி ஆவணங்கள் கொடுத்து சொகுசு கார் பதிவு செய்த வழக்கில் அமலா பால், நடிகர் பகத் பாசில் ஆகியோரும் ஏற்கனவே சிக்கினர். பகத் பாசில் அபராத தொகையை கட்டியதால் அவர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.