Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வரலட்சுமியின் 'வெல்வெட் நகரம்' ஸ்பெஷல் ஷோ... என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்?
சென்னை: வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், கஸ்தூரி நடிப்பில் மனோஜ்குமார் நடராஜன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் "வெல்வெட் நகரம்" இதனை திரைபிரபலங்கள் பலர் சிறப்பு காட்சி பார்த்தனர். அவர்கள் படத்தை பற்றி கூறிய தகவல்களை பார்ப்போம்.
நடிகை பிந்துமாதவி கூறுகையில், எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது, வரு என் தோழி ஆனால் அதனை எல்லாம் தாண்டி படம் நன்றாக உள்ளது வரு சூப்பராக நடித்துள்ளார். படத்தில் இரண்டாம் பாதி மிகவும் சுவாரசியமாக இருந்தது, திரைக்கதை அமைந்த விதம் புதுமையாக இருந்தது. ஒட்டுமொதத்தில் வெல்வெட் நகரம் ஒரு நல்ல திரைப்படம்.

நடிகர் சாந்தனு கூறுகையில், படம் நன்றாக இருந்தது, ஒரு சமூகத்தில் நடக்கும் காரணம் மற்றும் அங்கு நடக்கும் தவறுகள், அதனை வைத்து ஒரு திரில்லர் படமாக வழங்கியுள்ளனர். இது பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது, வருவின் நடிப்பு அருமையாகவும் ரசிக்கும் படியும் இருந்தது.
நடிகர் சரத்குமார் கூறுகையில், ஒரு திரில்லர் படமாக இருந்தது, கடைசியில் சமூதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூறியுள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த படம் இரண்டாம் பாதிக்கு பிறகு படம் விறுவிறுப்பாக இருந்தது, என்ன நடக்கிறது என்று எதிர்பார்ப்பு இருந்தது ஒரு வித்தியாசமான க்ளைமாக்ஸ் தந்துள்ளனர் மொத்தத்தில் படம் சூப்பர்.

நடிகர் ஹரீஷ் கல்யாண் கூறுகையில், ஆரம்பம் முதல் இறுதி வரை டேன்சனாக இருந்தது. திரைக்கதை அமைத்த விதம் சூப்பர், நான் எல்லோருடைய நடிப்பும் பாராட்டும் விதமாகவே இருந்தது. குறிப்பாக படத்தொகுபாளருக்கு பாராட்டுக்கள் மற்றும் பின்னணி இசையும் அற்புதமாக இருந்தது காட்சிக்கு காட்சி ஒலித்த அந்த இசை படத்தின் இரண்டாவது பாதியில் வேகத்தை கூட்டியது. ஒரு குழுவாக இவர்களுக்கு இது ஒரு சக்சஸ் படமாக இருக்கும் எனது பாராட்டுக்கள்.

இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், விறுவிறுப்பாக இருந்தது, இரண்டாம் பாதி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, புதுமையாக உள்ளது. இளம் தலைமுறையினரின் உழைப்பு, வரலட்சுமி மற்றும் அனைவரும் நன்றாக நடித்து இருந்தனர். மீண்டும் கூறுகிறேன் படம் விறுவிறுப்பாக அமைந்தது, அனைத்து வயதினரும் பார்க்கும் படமாக இருக்கும்.